Saturday 22 November 2014

நெல்லி ரசம்



தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் -3
துவரம் பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 தே .கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தே .கரண்டி
வரமிளகாய்-2
புதினா-1/2 கைப்பிடி
உப்பு -தே .அளவு

தாளிக்க :

நெய் -1/2 தே .கரண்டி
சீரகம் -1/2 தே .கரண்டி



செய்முறை :

நெல்லிக்காய்,வரமிளகாய்,புதினாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.



துவரம் பருப்புடன் மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துகொள்ளவும்.



பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டு  வேக வைத்த பருப்புக்கலவை, நெல்லிக்காய் விழுது,கொஞ்சம் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து,பொங்கி வரும் போது இறக்கவும்.



வாணலியில் நெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து அதை ரசத்துடன் சேர்க்கவும்

இனி மணக்க மணக்க தயாராக உள்ள நெல்லிக்காய் ரசத்தை ஒரு புடி புடிக்கலாமா?????


3 comments:

  1. நெல்லிக்காய் ரசத்தை ஒரு புடி புடிக்கலாமா????? //

    ஓ...ஒரு புடி புடிக்கலாமே...!!! சூப்பர் சரிதா.

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com
    (குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete