Saturday 7 March 2015

சோளப்பணியாரம்



சோள அரிசி பற்றிய குறிப்புகளில்  சில,

சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. 
அரிசி சார்ந்த உணவை விடசோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. 
மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

இத்தகைய சத்தான சோள அரிசியை வைத்து சுவையான  பணியாரம் செய்யலாமா?????

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1கப்
புழுங்கல் அரிசி -1கப்
வெள்ளை சோள அரிசி -1கப்
உளுந்து -1/4கப்
உப்பு -தே.அளவு
கருவேப்பிலை -1/4கைப்பிடி(நறுக்கியது)
கொத்தமல்லி -1/4(நறுக்கியது )

தாளிக்க :
எண்ணெய் -1மே.கரண்டி
கடுகு -1/4தே.கரண்டி
உளுந்து -1/4தே.கரண்டி
பச்சைமிளகாய்-2(நறுக்கியது)
பெரிய வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அரிசி,சோளம்,உளுந்து ஆகியவற்றை  3மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு  சேர்த்து கரைத்து வைக்கவும்.



அடுத்த நாள் மாவுடன் ,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து,கருவேப்பிலை,கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும்.



பணியாரச்சட்டியில் எண்ணெய் தடவி சட்டி காய்ந்தவுடன் மாவை ஊற்றவும்.

எண்ணெய் விட்டு வேகவிடவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்து)

திருப்பி விட்டு  மறுபுறமும் வேகவிடவும்.



இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான சோளப்பணியாரத்தை  தக்காளி சட்னியுடன் சாப்பிடவும்.




வாழ்க வளமுடன் ...