தேவையான பொருட்கள் :
அரிசி -1கப்
உருளைக்கிழங்கு -2(பெரியது)
வரமிளகாய் -2
தனியாவிதை -1 மே .க
கடலை பருப்பு -1தே .க
உளுத்தம்பருப்பு -1தே .க
பெருங்காயம் -1/4 தே .க
மஞ்சள்தூள் -1/2 தே .க
முந்திரி பருப்பு -10
எண்ணெய் -2 மே .க
கடுகு -1/4 மே .க
கருவேப்பிலை-தாளிக்க
கொத்தமல்லி
கொத்தமல்லி
நெய் - 1/2 மே .க
உப்பு -தே .அ
உப்பு -தே .அ
அரிசியை வேக வைத்து சாதம் தயாரித்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டு கிளறி தனியாக வைக்கவும் .
உருளைகிழங்கை குக்கரில் 2 விசில் வைத்து தோலை உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும் .
கடலைபருப்பு,வரமிளகாய்,பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும் .
தாளித்து மஞ்சள்தூள்,அரைத்த பொடி,உருளைக்கிழங்கு போட்டு நன்றாக கிளறவும் .மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி (அவ்வப்போது தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்) பிறகு சாதத்தை போட்டு நெய் விட்டு கொத்தமல்லி தூவி கிளறி இறக்கவும் .
உருளைக்கிழங்கு சாதம் தயார் .
உருளைக்கிழங்கு சாதம் மணக்கிறது.. இங்கு வரை.
ReplyDeleteநன்றி ஆன்ட்டி...
ReplyDeleteஎல்லாம் உங்கள் வாழ்த்துக்களுடன்....!!!!
வாழ்க வளமுடன்
சரிதா