தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் -10
தக்காளி -1
காளான் -10
இஞ்சி -1 இஞ்ச்
பூண்டு -8 பல்லு
மஞ்சள் தூள் -1/2 தே .கரண்டி
மல்லித்தூள் -1/2 தே .கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தே .கரண்டி
சீரகம் -1/2 தே .கரண்டி
நல்லெண்ணெய் -1/2 மே .கரண்டி
கொத்தமல்லி -1/2 கைப்பிடி
உப்பு -தே .அளவு
செய்முறை :
காளானை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்
இஞ்சி ,பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்
சின்ன வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி ஆகியவற்றை அரிந்து கொள்ளவும்
குக்கரில் 1கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன் காளானை போட்டு மற்ற
எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும் .உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் விடவும் .
குக்கரை திறந்து நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.
சூப்பர் சூப்...!!!
ReplyDeleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
நன்றி ஆன்ட்டி...
ReplyDeleteவாழ்க வளமுடன்
சரிதா .