காளான் குழம்பே கொஞ்சம் வித்தியாசமா செய்ய யோசித்தேன்,அப்போ கிடைத்த குழம்பு தான் மஸ்ரூம் அரைச்சு விட்ட குழம்பு...
மசாலா எல்லாம் சாதாரணமாக சேர்ப்பது தான் ...செய்முறை மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம் ...
எப்படினு பார்க்கலாமா ???
தேவையான பொருட்கள்:
காளான் -1பாக்கெட்
நறுக்கிய பெ .வெங்காயம் -2
நறுக்கிய தக்காளி -2
புதினா -1/2 கைப்பிடி
கொத்தமல்லி -1/2 கைப்பிடி
நெய் -1/2 தே.கரண்டி
மசாலாப்பொடி(மல்லி & மிளகாய் கலந்த பொடி)-2 மே .கரண்டி
எண்ணெய் -1 மே.கரண்டி
வறுத்து அரைக்க,
பட்டை-1 இன்ச்
கிராம்பு -1
பிரியாணி இலை -2
சோம்பு -2 தே.கரண்டி
கருவேப்பிலை -1 கைப்பிடி
தேங்காய்(நறுக்கியது)-1 கப்
எண்ணெய் -1 தே .கரண்டி
செய்முறை :
காளானை கட் செய்து சுடுதண்ணீரில் போட்டு அலசி வடிகட்டி எடுத்து வைக்கவும் .
எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை போட்டு வதக்கவும்,வாசனை வந்தவுடன் கருவேப்பிலை, சோம்பு,தேங்காய் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி,ஆறவைத்து,அரைத்து தனியாக வைக்கவும் .
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் ,புதினா போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் மசாலாப்பொடி,உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி,மஸ்ரூம் சேர்த்து கிளறவும் .
3 நிமிடம் கழித்து அரைத்த கலவை சேர்த்து, 1 நிமிடம் கிளறி தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து,கடைசியாக நெய் விட்டு கிளறி மூடி,4 விசில் விட்டு இறக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும் ...
நெய்விட்டிருப்பதால்,எண்ணெய் பிரிந்து குழம்பு பார்க்கவே நன்றாக இருக்கும்!!!
எல்லாவற்றிக்கும்(சாதம்,இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி) பொருத்தமான குழம்பு இது //////
வாழ்க வளமுடன்
மஸ்ரூம் குழம்பு சூப்பர்ர்ர்ர்ர்...!!!
ReplyDelete