Thursday 27 November 2014

வீட்டிலேயே பனீர் செய்யலாம்




தேவையான பொருட்கள் :

பால் -1லிட்டர் 
வினிகர் -2 தே.கரண்டி 
       அல்லது 
லெமன்-1(பெரியது )


செய்முறை :

லெமெனை ஜுஸாக பிழிந்து தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும் .
                                              (அல்லது )
வினிகர் உபயோகித்தால் அதனுடன் தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும் .


முதலில் பனீர் செய்ய,பாலை பாத்திரத்தில் ஊற்றிதண்ணீர் விடாமல்  காய்ச்ச வேண்டும்.பொங்கி வரும் போது,அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் கலந்து வைத்துள்ள வினிகர் அல்லது லெமன் ஜூஸை சேர்த்து கலக்க  வேண்டும்.

பால் திரிந்து வரும்.அடுப்பை அணைத்து விடவும்.



முழுவதும் திரிந்தவுடன் (பால் திரள்திரளாகவும் நீராகவும்பிரியும்),
பழச்சாறு வடிகட்டி மீது துணி போட்டு (அந்த திரளை நீரிலிருந்து பிரிக்க)
வடிகட்டவும்.



அதை சிங்க் பைப்பில் காட்டி ஸ்பூன் வைத்து கிளறி நன்றாக அலச வேண்டும்.(லெமன் ஜூஸ்(அ )வினிகர் சேர்ப்பதால்,அதன் புளிப்பு போக அலசுகிறோம்)

துணியை நன்றாக பிழிந்து நீர் முழுவதும் வடிகட்டி அப்படியே கட்டி(பயறு முளைக்கட்டுவது போல) அதன் மீது கனமான பொருளை வைத்து 2 மணி 
நேரம் அப்படியே வைக்கவும் .

பின் துணியை பிரித்தால் பனீர் தயார்.....



அதை கட் பண்ணி , டப்பாவில் அடைத்து, ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

பனீர் செய்ய தெரிந்தது, இனி கிரேவி ,பொடிமாஸ்,பிரியாணி 
எல்லாம் வீட்ல செய்து அசத்துங்க ......



பி .குறிப்பு :

வடிகட்டியிலிருந்து கீழ வரும் நீரை கொட்டாமல் 4 (அ ) 5 நாட்கள் புளிக்க 
வைக்கும் தண்ணீரை வே வாட்டர் என்பர்.

இந்த வே  வாட்டரை பொங்கி வரும் பாலில் விட்டு பாலை திரித்து பனீர் செய்யலாம் .

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது 4 (அ ) 5 ஸ்பூன் இந்த வே வாட்டர் விட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.







2 comments: