தேவையான பொருட்கள் :
சப்பாத்தி -6
குருமா -1 கப்
பெ .வெங்காயம்(நறுக்கியது )-2
தக்காளி (நறுக்கியது )-2
கருவேப்பிலை(நறுக்கியது ) -1/2 கைப்பிடி
கொத்தமல்லி -2 மே.கரண்டி
குடமிளகாய்(நறுக்கியது ) -1
பட்டை-1 இன்ச்
கிராம்பு -1
பிரியாணி இலை -2(சிறியது )
சோம்பு-1தே .கரண்டி
சீரகத்தூள் -1தே .கரண்டி
மிளகுத்தூள் -2 தே .கரண்டி
உப்பு -தே .அளவு
எண்ணெய் -தாளிக்க தே .அளவு
செய்முறை :
சப்பாத்தியை கட் செய்து தனியாக வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை வதக்கி தனியாக வைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வாசனை வந்தவுடன் சோம்பு,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
பிறகு வெங்காயம் போட்டு சிறிது வதங்கியவுடன்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்,சீரகத்தூள்,மிளகுத்தூள் போட்டு 2 நிமிடம் வதக்கி உப்பு ,
தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.
பச்சை வாசனை போனயுடன் சப்பாத்தி துண்டுகளை போட்டு கிளறவும்,பிறகு அந்த குருமா சேர்த்து எல்லாம் கலந்து வரும் வரை கிளறவும்.கடைசியாக கொத்தமல்லி போட்டு பரிமாறவும்.
பார்க்கவே சாப்பிட தூண்டும் வெஜ் கொத்து சப்பாத்தி தயார் ....
குருமா சேர்த்துள்ளதால் அப்படியே சாப்பிடலாம்..
வெங்காயம்-தயிர் பச்சடியும் தொட்டுக்கொள்ளலாம்...
குறிப்பு :
மிளகுத்தூளிற்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்க்கலாம் .
எந்த குருமானாலும்(வெஜ்,சால்னா,மஸ்ரூம் குழம்பு) சேர்த்துக்கலாம்.
மதியம் சாதத்திற்கு செய்த மஸ்ரூம் அரைச்சு விட்ட குழம்பு இருந்தது, அதை சேர்த்து செய்தேன்.
வாழ்க வளமுடன் .
நீங்கள் குறிப்பில் சொல்லிருப்பது போல் பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு.
ReplyDeleteசாப்பிட தோணும் போதே செய்து பார்த்து விடுங்கள் ...
ReplyDeleteநன்றி ...
வாழ்க வளமுடன்.